
அமரர் தெய்வேந்திரம் யதுஷன்
முன்னாள் மாணவன்- வத்தளை றோமன் கத்தோலிக்க தமிழ் மகா வித்தியாலம்(R.C.T.V) ஆரம்ப பள்ளி, கொழும்பு பம்பலப்பிட்டி இந்துக்கல்லூரி உயர் கல்வி
வயது 26

அமரர் தெய்வேந்திரம் யதுஷன்
1993 -
2020
கொக்குவில் கிழக்கு, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
அன்பு நண்பனின் ஆத்மா சாந்தியடையட்டும்
யாழ். கொக்குவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வத்தளையை வதிவிடமாகவும் கெளரி எனும் அன்னை மடியில்அவதரித்த மைந்தன் யதுஷன் நீஅனைவரையும் விட்டு போனதெங்கே சொல் நண்பா...?
கண்களில் நீர்பொழிய கைகள் நடுநடுங்க
இலக்கியம் தடுமாற இலக்கணம் தமிழ்மாற
எப்படி கவிதைகள் எழுதமுடியும்...?
உன்புகழ் எப்படி பாடமுடியும்...?
காயத்துடன் வந்திருந்தால் நொந்திடோமே
காலன் சாவெடுத்து போனானே நண்பா
சாகின்ற வயதா உனக்கு சாதிக்கும் வயது
சாந்தியாய் போனது ஏன் நண்பா...?
அன்று முதல் இன்று வரை - என்றும்
உன்முகம் வாடியதில்லை
உன்னோடு பேசியவர் உள்ளம் - என்றும்
துன்முகத்தை நாடியதில்லை - இன்று
மூடிவைத்து உன்முகத்தை நாங்கள்
கூடிவந்து கொண்டு செல்லும்
கொடிய நிலை ஏன் நண்பா...?
அன்னைக்கு கடைசி அனைவருக்கும் செல்லப்பிள்ளை உனை விரும்பாதோர் யாருமில்லை வெறுப்போர் என்று எவருமில்லை
கொடிய விபத்து வந்து நீ போக குறையுண்டோ நாங்கள் சொல்ல சொத்தென சேர்த்த சொந்தங்கள் கதிகலங்க அத்தனையும் விட்டதென்ன அரைவாழ்வை தொட்டதென்ன...?
யது யது என்று சொந்தங்கள் கலங்குகின்றனர்
பாரைய்யா பாரையா என பெற்றோர்கள் புலம்புகின்றனர் நண்பர்கள் செய்வதறியாது திகைத்து நின்றோம்
என்றும் நட்பின் பாவெடுத்து பாடி நிற்கிறோம்
அன்பின் பூவெடுத்து போற்றி நிற்கிறோம்
நலன்கள் பல செய்து நாங்கள் என்றும் வேண்டுகிறோம் நண்பா உன் சாந்தி என்றும் நலமாக அமையட்டும்
சாந்தி சாந்தி சாந்தி..
Write Tribute