Clicky

3ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 06 AUG 1935
இறப்பு 23 MAY 2018
அமரர் தவமணி கணேசமூர்த்தி 1935 - 2018 யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Sri Lanka Sri Lanka
Tribute 2 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். கோண்டாவில் வடக்கு அன்னுங்கையைப் பிறப்பிடமாகவும், வவுனியா உக்குளாங்குளம், கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட தவமணி கணேசமூர்த்தி அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆண்டு மூன்று ஆனது அம்மா
மாநிலத்தில் நீ பிரிந்து
தீராத துன்பத்தில் தேம்புகின்றோம்
நாம் இங்கு,
உறவுகளை தவிக்கவிட்டு
இமைகளை மூடிவிட்டாய்
எமையெல்லாம் அழவிட்டு
நாராயணனை நாடிவிட்டாய்
ஏங்கின்றோம் உங்கள் பாசத்துக்காக
எமை எல்லாம் நல் வாழ்வு வாழ செய்துவிட்டு
மாயமாக அந்த மாயவனின் காலடியில்
சேர்ந்து விட்டீர்களே அம்மா!
என்றும் உங்கள் நினைவுடன் வாழும்
கடைக்குட்டி மகள்
அரி ஓம் நமோ நாராயணா

ஆண்டுகள் மூன்று ஆனது தாயே!
ஆகினும் நெஞ்சுளம் யாவிலும் நீயே!
பொங்கிடும் புன்னகை ஒளிவட்டமாக!
சூழ்ந்து வழிகாட்டும் உம்முகம் தானே!
அன்புள்ளம் பண்புள்ளம் இரண்டும் கலந்து!
நல்லிசை வடிவினில் உரைத்தவள் நீயே!
வறுமையின் கொடுமை எமை நெருங்காது
கல்லணை போல காத்தவள் நீயே!
தாய்மையின் தூய்மை இறை நிகர்தானே
பத்து மாதம் கருவறை சுமந்த உம்மை
வாழ்நாமும் நெஞ்சறை சுமக்கின்றோம் தாயே
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனை பிரார்த்திக்கின்றோம்..
பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்


தகவல்: குடும்பத்தினர்