யாழ். இருபாலையைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட தர்ஷிகா மயூரன் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
எங்கள் பிரியமே
எங்களை விட்டு பிரிந்ததுதான் ஏனம்மா?
எங்களை தவிக்கவிட்டு
தூரப்போனதும் ஏனம்மா?
தேவதையே உனை
எண்ணி தேடி அலைகின்றோம்
உன் திரு முகத்தை காண்பதற்கு
தூக்கம் கெடும்போதும்
கொல்கிறது உன் நினைவு
தூங்கி எழும்போதும்
கனக்கிறது எம் இதயம்
கட்டிய கோட்டையெல்லாம்
கற்பனையாகியதே!
உனை இழந்து
உயிர் துடிக்கும்
உன் உறவுகள்
உன் பிரிவால் நாளும்
உனை தேடும் நம் சொந்தங்கள்
கதறி அழுகிறோம்,
கலங்கித் துடிக்கிறோம்
கண் காணாமல் மறைந்து விட்டாயோ?
ஆண்டுகள் பல ஓடிமறைந்து
விட்டது ஆனாலும்
என்றென்றும் உம் நினைவலைகள்
அழியாது எங்களுடனே வாழும்!!
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
our deepest sympathy rest in peace Tharshika