1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் தனுக்கோடி சுப்பிரமணியம்
1934 -
2018
நெடுந்தீவு, Sri Lanka
Sri Lanka
Tribute
7
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு துணுக்காய் விநாயகபுரத்தை வதிவிடமாகவும் கொண்டிருந்த தனுக்கோடி சுப்பிரமணியம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து
வானுறையும் தெய்வத்தில் தாழ் சேர்த்த
எங்கள் அன்புத் தந்தை ...
எங்கள் குடும்பத்தின் குலவிளக்காய்
அன்பான துணைவனாய்
அருமைத் தந்தையாய்
ஆசை மாமனாய்
பண்பான பாட்டனாய்
பாசமான பூட்டனாய் - நீங்கள்
எம்மோடு வாழ்ந்து எமக்கு நல்வழிகாட்டி - இன்று
எம்முன்னே தெய்வமாய் வாழ்கின்றீர்கள்!!
ஆண்டொன்று அகன்றாலும்
ஆறாது எம் துயரம்
உங்கள் ஆத்மா சாந்தி பெற
விநாயகபுரம் விநாயகரை வேண்டிப் பிரார்த்திக்கின்றோம்.
என்றும் உங்கள் நினைவுகளுடன்...
தகவல்:
குடும்பத்தினர்
தாத்தா என்று கூறும் போதே உங்கள் சிரிப்பும் நீங்கள் காட்டும் அளவில்லா பாசமும் தான் நினைவில் வருகின்றது. எல்லா உறவுகளையும் விட தாத்தா பேரப்பிள்ளை உறவு ஒரு அற்புதம் தான் என்றும் உங்கள் நினைவுகளுடன்...