யாழ். பிறவுன் வீதி 5ம்லேனைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Le Bourget ஐ வதிவிடமாகவும் கொண்ட தங்கவேலு புவனேந்திரன் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
பாரிநில் வாழ்ந்த காலம் பார்போற்ற
வாழ்ந்தவரே நாட்கள் பல நகர்ந்திடினும்
நாம் மறவோம் உம்மை என்றும்...நின்
ஆத்மா சாந்தி பெற இறையறுளை
வேண்டுகிறோம்
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு, இல்லம் நாடி ஓடோடி வந்து கண்ணீர் சிந்தியவாறு எமக்கு ஒத்தாசைகள் புரிந்தவர்களுக்கும் ஆறுதலும், தேறுதலும் கூறிய அன்புள்ளங்கள் அனைவருக்கும், தொலைபேசி, அனுதாப அட்டைகள் மற்றும் சமூக வலைதளங்கள் மூலமாக அனுதாபம் தெரிவித்த உள்நாட்டு, வெளிநாட்டு உறவினர், நண்பர்கள் அனைவருக்கும், கண்ணீர் அஞ்சலி பிரசுரித்த அன்பர்களுக்கும், மலர்வளையம் வைத்து அஞ்சலி செய்தோருக்கும், மற்றும் இறுதிநிகழ்வில் கலந்துகொண்ட அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் ஆத்ம சாந்தி பிரார்த்தனை 20-01-2020 திங்கட்கிழமை அன்று நடைப்பெற்றது.
இந்நிகழ்வில் உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.