Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 02 DEC 1938
மறைவு 05 APR 2019
அமரர் தங்கம்மா சிவசுப்பிரமணியம் 1938 - 2019 மட்டுவில் தெற்கு, Sri Lanka Sri Lanka
Tribute 6 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். சாவகச்சேரி மட்டுவில் தெற்கைப் பிறப்பிடமாகவும், நுணாவில் கிழக்கு சாவகச்சேரி, ஜேர்மனி, லண்டன் New Malden ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட தங்கம்மா சிவசுப்பிரமணியம் அவர்கள் 05-04-2019 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், மட்டுவில் தெற்கைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி சேதுப்பிள்ளை(இராசம்மா) தம்பதிகளின் ஏகபுத்திரியும், காலஞ்சென்றவர்களான நாகமுத்து செல்லாச்சி(இராசம்மா) தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சிவசுப்பிரமணியம்(நீர்ப்பாசன திணைக்களம்- வவுனிக்குளம்) அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற ஈஸ்வரன், கெளரி ஜெகதீஸ்வரன்(ஜேர்மனி), ஆதவன்(பிரித்தானியா), பவான்(ஜேர்மனி), மாதவன்(பிரித்தானியா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

ஜெகதீஸ்வரன், வசுமதி, அனுசியா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான நல்லதம்பி, இராஜரட்ணம், சின்னத்துரை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான நாகேஸ்வரி, மகேஸ்வரி மற்றும் புவனேஸ்வரி(அவுஸ்திரேலியா), செளந்தரம் இராஜசுந்தரம்(கொழும்பு) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை இராஜசுந்தரம் அவர்களின் உடன் பிறவாச் சகோதரியும்,

காலஞ்சென்ற நந்தினி, செல்வக்குமார், கலாயினி, குசேலினி, நந்தகுமார், தர்மினி, காலஞ்சென்ற பரதன், தர்ஷிகா, இராகினி, தயாளினி, கிருஷ்ணி, காலஞ்சென்றகளான இரவி, கீதா, யசோதரன், சிவகரன் ஆகியோரின் அன்பு மாமியும்,

சாருஜா, சிந்துஜன், அஷ்வின், ஆகாஷ், அபிலாஷ், ஆரபி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்