

யாழ். புளியங்கூடலைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட தனபாலசிங்கம் அன்னலட்சுமி அவர்கள் 02-08-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற செல்லையா, அன்னப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மகளும், கோப்பாயைச் சேர்ந்த காலஞ்சென்ற இரத்தினம், தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற தனபாலசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
நாகேஸ்வரி, காலஞ்சென்ற பார்வதிப்பிள்ளை(ஆசிரியை), சிற்றம்பலம்(முன்னாள் ப.நோ.கூ. சங்க கணக்காளர்- ஊர்காவற்றுறை), புவனேஸ்வரி, பரமேஸ்வரி(முன்னாள் ப.நோ.கூ. சங்க ஊழியர்- ஊர்காவற்றுறை) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான பொன்னுச்சாமி, மயில்வாகனம், பாலசிங்கம் மற்றும் தனலட்சுமி, பாக்கியலட்சுமி, மனோன்மனி, பேரின்பராணி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 03-08-2020 திங்கட்கிழமை அன்று பி.ப 03:00 மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சுருவில் புளியங்கூடல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.