Clicky

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
பிறப்பு 07 APR 1938
இறப்பு 24 JAN 2025
திரு தம்பிப்பிள்ளை காசிலிங்கம்
ஓய்வு பெற்ற மேற்பார்வையாளர், காகித தொழிற்சாலை, வாழைச்சேனை
வயது 86
திரு தம்பிப்பிள்ளை காசிலிங்கம் 1938 - 2025 இருபாலை, Sri Lanka Sri Lanka
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ். இருபாலை கட்டப்பிராயைப் பிறப்பிடமாகவும், உரும்பிராய் வடக்கு, சுதுமலை வடக்கு ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட தம்பிப்பிள்ளை காசிலிங்கம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

அன்பின் இருப்பிடமே பாசத்தின்
உறைவிடமே எங்கள் அப்பா
ஆசையாய் இருக்குதப்பா உங்கள்
முகம் பார்க்க வந்திட மாட்டீர்களா? 
உங்களுக்கு நிகர் வேறு யாரப்பா?
31நாட்கள் விரைந்தே போனதப்பா
நீங்கள் எங்களுடன் வாழ்வதாய்
நினைத்தே நாம் வாழ்கின்றோம்-ஆனாலும்
உங்கள் முகம் பார்க்க துடிக்கும் வேளையில்
நெஞ்சில் இரத்தம் சுண்டுதப்பா 
எத்தனை நாட்கள்  சென்றாலும் எம்
நெஞ்சை விட்டு அகலாது உங்கள் நினைவுகள்
இதயதுடிப்பு உள்ளவரை எங்கள்
இதய தீபம் நீங்கள் அப்பா!
 உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம். 

அன்னாரின் அந்தியேட்டிக் கிரியைகள் 21-02-2025 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 06:30 மணியளவில் கீரிமலை புனித தீர்த்தக்கரையில் நடைபெற்று, வீட்டுக்கிருத்தியம் 23-02-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெறும். அத்தருணம் தாங்களும் தங்கள் குடும்பசகிதம் வருகைதந்து அன்னாரின் ஆத்மசாந்திப் பிரார்த்தனையிலும் அதனைத்தொடர்ந்து நடைபெறும் மதிய போசனத்திலும் கலந்து கொள்ளும் வண்ணம் அன்புடன் அழைக்கின்றோம்.

முகவரி:
31. அம்மன் வீதி.
சுதுமலை வடக்கு.
மானிப்பாய்.

இங்ஙனம், குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

கண்ணன் - மகன்
மணி - மகன்
கோபி - மகள்
ரூபன் - மருமகன்
Tribute 4 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.