யாழ். அல்வாயைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Frick ஐ வதிவிடமாகவும் கொண்ட தாமோதரம்பிள்ளை நாதன் அவர்களின் நன்றி நவிலல்.
நாட்கள் முப்பத்து கடந்தாகி விட்டது இருந்தும்
மனம் ஏற்க மறுத்து அடம் பிடிக்கிறது
அப்பா வேண்டுமென்று
என்ன தவறு செய்து விட்டோம்?
அப்பா உங்களை இழந்து விடுவேனோ என்ற
தேவையில்லாத பயத்தில் நகர்ந்த நாட்கள்
கடந்து இன்று மெய்யாகவே உங்களை
இழந்து நிற்கின்றோம்.
என்ன தவறு செய்து விட்டோம்?
தன்னுடைய உலகத்தை மறு உலகத்திற்கு அனுப்ப
உங்கள் கண்ணில் ஆனந்த கண்ணீர் வழிய
என்னை வழி அனுப்பி வைத்தீர்கள் அன்று - இன்று
நான் அழப் பொறுக்கா மா மனிதன் என்னை அழைக்கவில்லை
அவர் தான் என்னைப் பெற்றெடுத்த என் அப்பா
என்ன தவறு செய்து விட்டோம்?
எத்தனையோ சரிவுகளுக்கு பிறகும் தைரியமாய்
சிரித்துக் கொண்டிருந்த அப்பாவுக்கு
நிகரான நம்பிக்கையூட்டும் புத்தகம் பிரபஞ்சத்தில்
எங்கும் இல்லை
என்ன தவறு செய்து விட்டோம்?
கயநலமில்லா மூன்றெழுத்து மந்திரம் என் அப்பா
உன் அன்பை தோற்கடிக்கும் மற்றொரு அன்பை
உலகில் யாரும் தரபோவதில்லை உன்னைத் தவிர
என்ன தவறு செய்து விட்டோம்?
தனக்கென்று இருக்கும் ஆசைகளை மறைத்து
சந்தோஷங்களை விட்டுக்கொடுத்து மற்றவர்களின்
சந்தோஷங்களுக்காக வாழ்ந்து பார் அதை விட
வேறு சந்தோஷம் இல்லை என இவ்வுலகில் வாழ்ந்தீர்கள் அப்பா
என்ன தவறு செய்து விட்டோம்?
ஆயிரம் சொந்தங்கள் அணைத்திட இருந்தாலும்
அப்பாவே உன் போன்று அன்பு செய்ய யாரும்
இல்லை இவ் உலகில் ......
உங்கள் பிரிவால் வாடும்
மனைவி மக்கள் மருமக்கள்
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், தொலைநகல், மின்னஞ்சல், சமூக வலைதளங்கள் ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
We are shocked to hear this unexpected sad news. Deeply grieved.,on this sad loss of Kili. Our heartfelt condolences to Kili’s family.