Clicky

மரண அறிவித்தல்
மண்ணில் 14 JUL 1939
விண்ணில் 29 SEP 2020
அமரர் தம்பு சண்முகநாதன் 1939 - 2020 புங்குடுதீவு 2ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 24 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கண்ணகைபுரம் 10ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும், சுவிஸ் Luzern ஐ தற்போதைய வதிவிடமாகவும்  கொண்ட  தம்பு சண்முகநாதன் அவர்கள் 29-09-2020 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற தம்பு, வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற வைரமுத்து, நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

நாகலெட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,

நாகபூரணி(பூரணி) அவர்களின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற கனகசூரி, பாக்கியலெட்சுமி(கனடா), காலஞ்சென்ற கிஸ்ணராஜா, கமலாதேவி(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

விஜயகுமார்(விசயன்- பிரான்ஸ்) அவர்களின் சிறிய தந்தையும்,

கேதீஸ்வரநாதன்(ஈசன்), கவிதா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஞானம்மா(இலங்கை), காலஞ்சென்றவர்களான நடராஜா, தில்லைநாதன், தேவி, விநாயகமூர்த்தி, கணேசமூர்த்தி, வைத்திஸ்வரமூர்த்தி, கனகலெட்சுமி மற்றும் பத்மாவதி(லண்டன்), திலகவதி, புண்ணியமூர்த்தி(சுவிஸ்), நடேசமூர்த்தி(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

வைத்திலிங்கம்(இலங்கை), காலஞ்சென்ற ராசமணி ஆகியோரின் பாசமிகு சம்மந்தியும்,

அனிஸ், அஜிந்(சுவிஸ்), விக்டோர், சஜானா, சயின், வசிர், சஞ்சை(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.  

தகவல்: குடும்பத்தினர்