யாழ். பண்டத்தரிப்பு பிரான்பற்றைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட தம்பு கந்தசாமி அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அமரர் தம்பு கந்தசாமி அவர்களின் ஆத்மசாந்திக் கிரியைகள் எதிர்வரும் 03-08-2023 வியாழக்கிழமை அன்று மு.ப 08.00 மணியளவில் கீரிமலை புனித தீர்த்தக் கரையிலும், வீட்டுக்கிருத்தியக் கிரியைகள் 05-08-2023 சனிக்கிழமை அன்று மு.ப 11.00 மணியளவில் அன்னாரது இல்லத்திலும் நடைபெறும். அத்தருணம் தாங்களும் தங்கள் குடும்பத்தினரும் வருகை தந்து அன்னாரின் ஆத்மசாந்திப் பிரார்த்தனையிலும் அதனைத் தொடர்ந்து நடைபெறும் மதியபோசனத்திலும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
வீட்டு முகவரி:
பிரான்பற்று.
பண்டத்தரிப்பு.
எமது குடும்பம் சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றோம் . ஓம் சாந்தி சாந்தி சாந்தி.