யாழ். அல்வாய் வடக்கு மகாத்மா வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட தம்பு பாலசிங்கம் அவர்களின் நன்றி நவிலல்.
கடந்த 24-09-2019 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்த, எமது குடும்ப தலைவர் தம்பு பாலசிங்கம் அவர்கள் நோய்வாய்ப்பட்டிருந்தபோது உதவி புரிந்தவர்களுக்கும் சிகிச்சை செய்த வைத்தியர்களுக்கும் அவரின் பிரிவின் போது நாம் துன்புற்றிருந்தவேளை ஆகவேண்டிய கருமங்களை எமக்கு செய்துதவிய உறவுகளுக்கும், நண்பர்களுக்கும் நேரில் வந்தவர்களுக்கும் தொலைபேசி மூலமும், இணையத்தளம் ஊடாகவும் அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், அஞ்சலிப் பிரசுரங்கள், பதாகைகள் வெளியிட்டு தமது அனுதாபங்களை தெரிவித்தவர்களுக்கும் உற்றார், உறவினர், நண்பர்களும் சகல நிகழ்வுகளிலும் எம்முடன் கைகோர்த்து இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அனைத்து உறவுகளுக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.