யாழ். நெடுந்தீவு கிழக்கைப் பிறப்பிடமாகவும், யோகபுரம் மல்லாவி, டென்மார்க், ஜேர்மனி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், தற்போது பிரித்தானியா Coventry ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த தம்பிப்பிள்ளை பார்வதி அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.
ஒரு வருடம் கடந்தாலும்,
உங்கள் நினைவு ஒரு நாளும்
எங்களை விட்டு விலகவில்லை.
ஒவ்வொரு நாளும் உங்களை நினைக்கிறோம்...
ஒவ்வொரு பிரார்த்தனையிலும்
உங்களைச் சேர்த்துக் கொள்கிறோம்...
ஒவ்வொரு கண்ணீர்த் துளியிலும்
உங்கள் முகத்தைக் காண்கிறோம்.
அம்மா...
உங்கள் மடியில் கிடைத்த அமைதியை
இந்த உலகில் வேறு எங்கும் காண முடியவில்லை.
அம்மம்மா...
நீங்கள் எங்களை விட்டு சென்றுவிட்டீர்கள்
என்பதை எங்கள் மனம்
இன்னும் ஏற்றுக்கொள்ளவில்லை.
”காலம் ஒரு வருடத்தைக் கடந்தாலும்,
உங்கள் அன்பின் வெப்பம்
இன்றும்
எங்கள் இதயங்களில் குறையாமல் இருக்கிறது.
நீங்கள் இல்லாத வெற்றிடம்
என்றும்
நிரப்ப முடியாத ஒன்றாகவே இருக்கும்."
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்...