1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் தம்பிஐயா ஆறுமுகம்
முன்னாள் கொழும்பு மாநகரசபை படவரைஞர், மொழிபெயர்ப்பாளர், சமாதானநீதவான், சில்லாலை ஶ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய திருப்பணிச்சபை செயலாளர்
வயது 74
Tribute
11
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
திதி: 01-08-2022
யாழ். பண்டத்தரிப்பு சில்லாலை தெற்கைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்டிருந்த தம்பிஐயா ஆறுமுகம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
நீங்கள் எம்மை விட்டு பிரிந்து
ஓராண்டு ஆன போதும்
உமை நாங்கள் இழந்த துயரை
ஈடு செய்ய முடியாமல்
தவிக்கின்றோம்-மாமா
கண்முன்னே நீங்கள் வாழ்ந்த
காலம் கனவாகிப் போனதுவோ!
மாமா எமை ஒரு நிமிடமும்
காணாவிட்டால் துடித்து பதை
பதைத்த நினைவுகளை இன்னும்
கண்ணீர் விழி நனைக்குதப்பா!
எமை எல்லாம் அன்பால்
அரவணைத்து பண்பால் வழிநடத்திய
அந்த நாட்கள் எமை விட்டு
நீண்டதூரம் சென்றாலும்-மாமா
மாறாது ஒருபோதும் உம்
கொள்கை நம் வாழ்வில் என்றும்
மறையாது உங்கள் நினைவு
எம் மனதை விட்டு மாமா!!!
தகவல்:
மதியழகன்(மருமகன்)