Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 29 JUN 1947
மறைவு 12 AUG 2021
அமரர் தம்பிஐயா ஆறுமுகம்
முன்னாள் கொழும்பு மாநகரசபை படவரைஞர், மொழிபெயர்ப்பாளர், சமாதானநீதவான், சில்லாலை ஶ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய திருப்பணிச்சபை செயலாளர்
வயது 74
அமரர் தம்பிஐயா ஆறுமுகம் 1947 - 2021 பண்டத்தரிப்பு, Sri Lanka Sri Lanka
Tribute 11 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். பண்டத்தரிப்பு சில்லாலை தெற்கைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட தம்பிஐயா ஆறுமுகம் அவர்கள் 12-08-2021 வியாழக்கிழமை அன்று கொழும்பில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிஐயா பொன்னம்மா தம்பதிகளின் சிரேஸ்ர புதல்வரும், காலஞ்சென்றவர்களான நடராசா பூபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற தவமணி அவர்களின் பாசமிகு கணவரும்,

காலஞ்சென்ற பராசக்தி, மற்றும் மகாலட்சுமி, இராசலட்சுமி, இரத்தினசிங்கம்(நெதர்லாந்து), மகேஸ்வரி, பரமேஸ்வரி, துரைசிங்கம்(பிரித்தானியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான தருமலிங்கம், கதிர்காமநாதன்(பிரான்ஸ்), செல்வபாக்கியம், நவரத்தினம் மற்றும் இரத்தினராசா, புஸ்பராசா (முருகையா), கல்பனா(நெதர்லாந்து), இரங்கநாதன், ராதா(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

மருமக்களின் அன்பு மாமனாரும்,

பெறாமக்களின் அன்புப் பெரியப்பாவும்,

பெறாமக்களின் அன்புச் சித்தப்பாவும்,

 பேரப்பிள்ளைகளின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 13-08-2021 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 09.30 மணியளவில் நடைபெற்று பின்னர் வெலிசர மின்மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

மதி - மருமகன்
வீடு - உறவினர்
இரத்தினசிங்கம் - தம்பி
துரைசிங்கம் - தம்பி
முருகையா - மைத்துனர்
இரங்கநாதன் - மைத்துனர்
சிவாகரன் - மருமகன்
தவேந்திரன் - மருமகன்
தாசன் - மருமகன்