யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Lausanne ஐ வதிவிடமாகவும் கொண்ட தம்பாபிள்ளை சிவகுமாரன் அவர்களின் நன்றி நவிலல்.
எமது குடும்பத் தலைவர் தம்பாப்பிள்ளை சிவகுமாரன் அவர்களின் அமரத்துவம் அடைந்த போது விரைந்து வந்து உதவிகள் புரிந்தவர்களுக்கும், நேரில் வந்து அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும் உள்நாடு மற்றும் வெளிநாடுகளிலிருந்து அனுதாபச் செய்தி அனுப்பியவர்களிக்கும், கண்ணீர் அஞ்சலி வெளியிட்டு எம் துயரில் பங்கு கொண்டவர்களுக்கும், தொலைபேசி மூலம் ஆறுதல் கூறியவர்களுக்கும், பூங்கொத்துக்கள் வைத்தவர்களுக்கும், இறுதிக்கிரியைகள் மற்றும் அந்தியேட்டிக் கிரியைகளை சிறப்பாக முன்னின்று நடத்தியோருக்கும், அவற்றில் கலந்து கொண்டு மனதாலும், வாக்காலும் அன்னாரின் ஆத்ம சாந்திக்காகப் பிரார்த்தித்த அனைத்து உற்றார், உறவினர்கள், நணபர்கள் மற்றும் அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் இந்நூலை வெளியிட உதவிய அனைவருக்கும் மற்றும் உதவிய அனைவருக்கும் எமது உள்ளம் கனிந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
இங்ஙனம்,
சிவாஜினி(மனைவி), சஞ்செயன்(மகன்)