யாழ். வெற்றிலைக்கேணியைப் பிறப்பிடமாகவும், ஆழியவளை கொடுக்குழாய் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட தம்பியையா பாலசிங்கம் அவர்களின் நன்றி நவிலல்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அமரர் தம்பிஐயா பாலசிங்கம் அவர்களின் சிவபதப் பேறு குறித்து அந்தியேட்டி கிரியை 02-08-2023 புதன்கிழமை அன்று கீரிமலையிலும், வீட்டுக்கிருத்திய நிகழ்வுகள் 06-08-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 11.00 மணியளவில் அன்னாரின் இல்லத்திலும் நடைபெறும். இந்நிகழ்வில் கலந்துகொண்டு ஆத்ம சாந்திப் பிரார்த்தனையிலும், மதிய போசன நிகழ்விலும் கலந்து கொள்ளுமாறு தங்களை அன்புடன் அழைக்கின்றோம்.
வீட்டு முகவரி:
உப தபால் நிலையம் அருகாமை.
ஆழியவளை.