திதி: 14-03-2026
யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம் வீராமலையைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Olten, Solothurn ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த தமிழ்செல்வன் மார்கண்டு அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.
நான்கு ஆண்டுகள் ஒரு நிமிடமாக கரைந்துவிட்டது
தீராத ஏக்கத்துடன் இன்னமும்
துடிக்கின்றது எம் இதயம்
உங்கள் இனிய புன்னகை மீண்டும்
ஒருமுறை காண்போமா...
சகோதரங்கள், மகன்
உமை நினைத்து வாடிடவே
போனது எங்கேயோ?
உறவுகளைப் பிரிந்து!
அண்ணா என்று அழைக்க
நீங்கள் இல்லையே அடி மனதில்
வலி துடிக்க உயிரோடு வாழ்கிறோம்
எங்கள் உயிர் உள்ளவரை எங்கள்
நினைவுகளில் கலந்தே இருக்கும்
உங்கள் நினைவுகள் அண்ணா!
அல்லும் பகலும் ஓயாது உழைத்ததனால்
அமைதியில் ஓய்வெடுக்க இறைவனடி சென்றீரோ
காலத்தின் சக்கரங்கள் கடுகதியில் சென்றாலும்
கடந்து வந்த பாதையிலே நினைவலைகள் தொடரட்டும்
என்றும் உங்கள் ஆன்மா சாந்தி பெற
இறைவனை வேண்டிப் பிரார்த்திக்கின்றோம்..!
உங்கள் நினைவுகளுடன்
சகோதரங்கள், மருமக்கள் மற்றும் மகன்
I was saddened to hear that the beautiful person passed away. My thoughts are with you and your family.