யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், கொழும்பு கொட்டாஞ்சேனையை வதிவிடமாகவும், கிளிநொச்சி முரசுமோட்டையை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட சுவீக்கீன் பிலோமினம்மா அவர்கள் 18-03-2021 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற ஜேம்ஸ், சலோமை தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற சந்தியோகு சுவக்கீன் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற கத்தரீன்(அழகு) அவர்களின் அன்புச் சகோதரியும்,
நசரேனு(செல்வராசா) அவர்களின் அன்பு மைத்துனியும்,
ஜீட் சகாயராஜா(ஜெயக்குமார்- கனடா), அன்ரன் சார்ளஸ்(சாந்தகுமார்- ஜேர்மனி), ஜீட் நிக்ஸ்சன்(பாலக்குமார்- இத்தாலி), சுமித்திரா(சுதா- கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ஜெசிக்கா, கவிதா, ரதி, பொனி வில்சன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
Jeneni, Jackson, Divinciya, Rivonciya, Stephanie, Eric, Gladric ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 21-03-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று புனித சதாசகாய மாதா ஆலயத்தில் திருப்பலிக்கு ஒப்புக் கொடுக்கப்பட்டு பின்னர் கோரகங்கட்டு சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.