யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Coventry ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சுதாகர் இராமசிங்கம் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் பாச ஒளிவிளக்கே, எம் தோட்டத்து வாசமலரே
அன்பின் உருவான தம்பியே
மூன்று ஆண்டுகள் முடிந்தாலும் உங்கள் முகம்
எங்கள் நெஞ்சை விட்டு அகலவில்லை தம்பியே
காலங்கள் போனாலும் எங்கள் காயங்கள் ஆறவில்லை
பாசமாய் எங்களை கண்மணியாய்
பார்த்தீர்களே
ஆசையாய் நீங்கள் வீடுவருவீர்கள்
என்று
ஆவலாய் நாங்களும் காத்திருந்தோம் தம்பி..!
பாதியில் எங்களை தவிக்கவிட்டு வாய்மூடி சென்றதென்ன ?
நோயின் பிடியெல்லாம் நீங்கி, நெஞ்சமெல்லாம்
நாம் பூரிப்போடு இருக்க
மாலையில்
வந்தசேதி கேட்டு நாம் கதி கலங்கி நின்றோமப்பா
உங்கள் இறுதிமூச்சு நின்றோட இன்றளவும்
நம்பமுடியவில்லை
நீங்கள் இல்லாத வாழ்க்கையை
காலங்கள் போகலாம், காயங்கள் மாறலாம்
நெஞ்சினில் உள்ள உங்கள் நினைவுகள்
என்றும் நம்மைவிட்டு போகாது தம்பி
உங்கள் நினைவினை காலமெல்லாம்
நாங்கள்
நெஞ்சினிலே சுமந்து நிற்போம்
எங்கள் அன்பு தம்பி.
"நெஞ்சிருக்கும் வரை உங்கள் நினைவிருக்கும்"
தம்பி உங்கள் நினைவுகள் என்றும் எம்மோடு இருக்கும். ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்போம் ?????