திருகோணமலை அன்புவழிபுரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Bern, Fribourg ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சுதா பிறேம்ராஜ் அவர்களின் நன்றி நவிலல்.
எல்லோருக்கும் நல்லவளாய்
என்றென்றும் இனியவளாய்
எம் இல்லத்து அரசியாய்
இணையற்ற மனைவியாய்
நாநிலத்தில் நல்வாழ்வு வாழ்ந்து
நன்நெறி நின்று மேதினியில்
மேல் நிலையில் நாம் வாழ
துணை நின்ற எங்கள் குடும்ப தீபம்
அணைந்து விண்நோக்கிச் சென்றது...
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், தொலைநகல், மின்னஞ்சல், சமூக வலைதளங்கள் ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், அந்நாளில் நாம் நெஞ்சம் கனத்து கண்ணீர் சொரிந்து கலங்கி நின்ற வேளையில் உணர்வோடு, உரிமையுடன் ஓடிவந்து ஆறுதல்கள் நவின்றவர்களுக்கும், எம் துயர் போக்க அருகிருந்து உதவியவர்கள், ஈழத்தில் இருந்தும் புலம்பெயர் தேசங்களில் இருந்தும் தொலைபேசி மின் அஞ்சல் சமூக வலை தளங்கள் வான் அலை நேரலை மூலமாகவும் அஞ்சலிகள் ஈர்த்திட்ட அன்பர்கள் மலர்வளையங்களால் கௌரவித்து இறுதி அஞ்சலி நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் இறுதிக்கிரியை செய்த குரு மார்கள் உற்றார் உறவினர, சுற்றத்தார், நண்பர்கள், உணவு உபசாரம் செய்து இன்னும் பல வழிகளில் உதவிகள் செய்த அனைவருக்கும் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் மதியபோசன நிகழ்வு 25-07-2020 சனிக்கிழமை அன்று ந.ப 11:00 மணிமுதல் 03.00 மணிவரை Gnanalingeshwarar Temple, Freiburgstrasse 144, 3008 Bern என்னும் முகவரியில் நடைபெறும்.