ஆழ்ந்த இரங்கல் நான் அன்புடனும் மரியாதையுடனும் "ஐயா" என்று அழைக்கும் திரு. சுப்பையா துரைச்சாமி ஐயா அவர்கள், 105 வயதில் இன்று இறைவனடி சேர்ந்த செய்தி மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. அவர்களின் நீண்ட ஆயுளும், நிறைவான வாழ்வும் அனைவருக்கும் ஒரு முன்மாதிரியாகும். அவர்களின் பிரிவால் வாடும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் எங்களது ஆழ்ந்த இரங்கலையும் மனமார்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம். அன்னாரின் பூவலக மறைவால் துயருற்றிருக்கும் உறவுகள் அனைவரோடும் எங்களது ஆழ்ந்த இரங்கலைப் பகிர்வதோடு ஆத்ம ஈடேற்றத்துக்கு புளியங்கூடல் அன்னை செருத்தனைப்பதி இராஜமகாமாரி அம்மன் பாதம் பணிந்து பிரார்த்திக்கின்றோம். ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி ஆழ்ந்த இரங்கலுடன் செல்வரட்ணம் இரத்தினறூபன் குடும்பத்தினர் (றூபன்)