Clicky

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
பிறப்பு 22 OCT 1936
இறப்பு 11 FEB 2024
திரு சுப்பிரமணியம் துரைரட்ணம்
பரந்தன் இராசயண கூட்டுத்தாவன உத்தியோகஸ்த்தியர்
வயது 87
திரு சுப்பிரமணியம் துரைரட்ணம் 1936 - 2024 மட்டுவில், Sri Lanka Sri Lanka
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ். மட்டுவிலைப் பிறப்பிடமாகவும், அளவெட்டி, திருகோணமலை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் துரைரட்ணம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

31 நாள் ஆனாலும் ஆறமுடியவில்லை எம்மால்!
உங்களை நாம் இழந்த துயரை ஈடுசெய்ய
இயலாமல் தவிக்கின்றோம்!

அன்று எங்களது துன்பம் நீக்க
குடும்பத்தின் குல விளக்காய்
பாசத்தின் பிறப்பிடமாய் பண்பின் உறைவிடமாய்
வாழ்வின் வழிகாட்டியாய் எம்முடனே!
எமக்காகவே வாழ்ந்த எம் குலக்கொழுந்தே!

கருணையின் வடிவமே பண்பின் சிகரமே
உனது அன்பாலும் அரவணைப்பாலும்
உனது நித்திய சிரிப்பாலும் அடுத்தவர்களிற்கு கூறும்
ஆறுதல் வார்த்தைகளாலும் அனைவரையும் கவர்ந்தீரே!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம். 

அன்னாரின் அந்தியோட்டி கிரியைகள் மற்றும் ஆத்மசாந்தி பூஜை 12-03-2024 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 10.30 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னார் மதிய போசன நிகழ்வு பிருந்தாவனம் திருமணமண்டபத்தில் இடம்பெறவுள்ளதால் தாங்களும் தங்கள் குடும்பத்தினரும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம். 

இங்ஙனம், குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

திருமால்வன் - மகன்
தங்கரூபன் - மகன்
Tribute 0 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute