Clicky

நன்றி நவிலல்
அன்னை மடியில் 12 APR 1945
ஆண்டவன் அடியில் 27 APR 2022
அமரர் சுப்பிரமணியம் சிவஞானம் 1945 - 2022 தாவடி வடக்கு, Sri Lanka Sri Lanka
நன்றி நவிலல்

யாழ். தாவடி வடக்கு கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், இணுவில், கொழும்பு கந்தானை, சிங்கப்பூர், பிரான்ஸ் Combs-la-ville ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் சிவஞானம் அவர்களின் நன்றி நவிலல்.

ஓர் திங்கள் ஆனதுவோ... கண்மூடித்திறக்கும் முன்னே
அப்பா..! அப்பா..! என்றழைக்க என் உதடுகள்
இன்னமும் தான் ஓயவில்லை
அழியாத உங்கள் இனிய முகமும்
எம் நெஞ்சினின்று இன்னமும் நீங்கவில்லை

31 நாட்கள் ஆகியென்ன, அழுதுபுரண்டென்ன
மறைந்துபோன எங்கள் அப்பா
மறுபடியும் தான் வருவதெப்போ....!!!

எம்மை எல்லாம் அன்பால் அரவணைத்து
பண்பால் வழிநடத்திய அந்த நாட்கள்
எம்மை விட்டு நீண்ட தூரம்
சென்றாலும் மறையாது அப்பா!

31 நாள் அல்ல எத்தனை ஆண்டுகள் ஓடிமறைந்தாலும்
உங்கள் அன்பும் பாசமும் அரவணைப்பும்
என்றும் எம் நினைவை விட்டு அகலாது

உங்கள் பிரிவால்
வாடும் குடும்பத்தினர்..!!!!

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

அன்னாரின் 31ம் நாள் நினைவஞ்சலி 28-05-2022 சனிக்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் 13 Rue du Multien77380 Combs-la-Ville, France எனும் முகவரியில் நடைபெறும்.

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 11 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.