5ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் சுப்பிரமணியம் ஈஸ்வரி
வயது 77
Tribute
2
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ். மானிப்பாய் கிழக்கைப் பிறப்பிடமாகவும், புத்தளம், வவுனியா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சுப்பிரமணியம் ஈஸ்வரி அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
பாசமுள்ள எங்கள் அம்மாவே
அன்பால் எங்களை காத்தவளே
பாசம் காட்டி எங்களை வளர்த்தவளே!
அன்பான எங்கள் பொக்கிஷத்தை
ஆண்டவனே பறித்தானே
ஆண்டுகள் ஐந்து முடிந்தாலும்
உங்களை ஏங்கி தவிக்கின்றோம் அம்மா!
எங்களையெல்லாம் கண்ணீர் கடலில் மூழ்க விட்டு
எங்கு சென்றீர்கள் அம்மா
ஆயிரம் உறவுகள் அரவணைக்க இருந்தாலும்
அம்மாவின் அன்போடு
உன் அன்பும் ஈடாகுமே அம்மா!!
உங்களைப் பற்றிய எண்ணங்கள்
இதயங்களில் வலியையும்
ஞாபகங்கள் கண்ணீரையும்
தந்து கொண்டேயிருக்கின்றன..
உங்கள் பிரிவால் துயருறும்
பிள்ளைகள்.
தகவல்:
குடும்பத்தினர்