யாழ். வேலணை கிழக்கு 2ம் வட்டாரம் அம்மன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், முரசுமோட்டையை வதிவிடமாகவும், பிரான்ஸ் Evry ஐ தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் வீரசிங்கம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
எங்கள் குடும்பத்தின் ஒளிவிளக்காக திகழ்ந்து எம்மையெல்லாம் ஆறாத்துயரில் ஆழ்த்திவிட்டு இறைபதம் அடைந்த சுப்பிரமணியம் வீரசிங்கம் அவர்களின் இறுதி நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் பலவழிகளில் எமக்கு உதவி புரிந்த அனைத்து உள்ளங்களுக்கும் நேரில் வந்தும் வெளிநாடுகளில் இருந்தும் தொலைபேசி ஊடாக ஆறுதல் செய்தி ககூறியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் ஆத்மசாந்தி பிரார்த்தனை 16-04-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெறும். அதனைத் தொடர்ந்து நடைபெறும் அந்தியேட்டி கிரியைகளிலும், மதிய போசனத்திலும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.