Clicky

நன்றி நவிலல்
பிறப்பு 23 DEC 1934
இறப்பு 27 DEC 2020
அமரர் சுப்பிரமணியம் மயில்வாகனம்
ஓய்வுபெற்ற தபாலதிபர்- உரும்பிராய் கருணை இல்ல ஆரம்பகால முன்னாள் காரியதரிசி
வயது 86
அமரர் சுப்பிரமணியம் மயில்வாகனம் 1934 - 2020 நயினாதீவு, Sri Lanka Sri Lanka
நன்றி நவிலல்

யாழ்.நயினாதீவு 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், உரும்பிராய், கொழும்பு வெள்ளவத்தை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் மயில்வாகனம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

எம்மை ஆறாத் துயரில் ஆழ்த்தி மீளாத் துயில் கொண்ட அப்பாவின் பிரிவுச் செய்தி கேட்டு, நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசி, மின்னஞ்சல், சமூக வலைத்தளங்கள் ஆகியவை மூலமாக எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், இறுதி நிகழ்வில் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தியவர்களுக்கும், சகல நிகழ்வுகளிலும் எம்முடன் கைகோர்த்து இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த உற்றார், உறவினர், நண்பர்களுக்கு எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

அன்னாரின் சிவபதப்பேறு குறித்த அந்தியேட்டிக் கிரியை 24-01-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 06:00 மணியளவில் கொழும்பு முகத்துவாரம் அந்தியேட்டி கிரியை மண்டபத்திலும், ஆத்மசாந்திப் பிரார்த்தனை 26-01-2021 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் இல.08, லோறன்ஸ் றோட், பம்பலப்பிட்டி, கொழும்பு 04 இல்(மாணிக்கப்பிள்ளையார் கோவில் அருகில்) அமைந்துள்ள AVS திருமண மண்டபத்தில் நடைபெறவுள்ளதால் அத்தருணம் தாங்களும் குடும்ப சமேதரராய் வருகை தந்து அன்னாரின் ஆத்மசாந்திப் பிரார்த்தனையிலும் அதனைத் தொடர்ந்து இடம்பெறும் மதிய போசனத்திலும் கலந்து கொள்ளும் வண்ணம் அன்புடன் அழைக்கின்றோம்.

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 26 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

கண்ணீர் அஞ்சலிகள்