Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 23 DEC 1934
இறப்பு 27 DEC 2020
அமரர் சுப்பிரமணியம் மயில்வாகனம்
ஓய்வுபெற்ற தபாலதிபர்- உரும்பிராய் கருணை இல்ல ஆரம்பகால முன்னாள் காரியதரிசி
வயது 86
அமரர் சுப்பிரமணியம் மயில்வாகனம் 1934 - 2020 நயினாதீவு, Sri Lanka Sri Lanka
Tribute 26 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ்.நயினாதீவு 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், உரும்பிராய், கொழும்பு வெள்ளவத்தை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் மயில்வாகனம் அவர்கள் 27-12-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று கொழும்பில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான  சுப்பிரமணியம் அமராவதி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான  கதிரித்தம்பி யோகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சவுந்தரம்(ஓய்வுபெற்ற விஞ்ஞான ஆசிரியை, உரும்பிராய் இந்துக் கல்லூரி) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

ரமணி(லண்டன்- முன்னாள் சுருக்கெழுத்தாளர் பல்கலைக்கழக  கல்லூரி, வவுனியா), மனோகரி(ஆசிரியை பரிசுத்த திருத்துவ மத்தியகல்லூரி- நுவரெலியா), பகீரதி(மருந்தாளர்- தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபை, NMRA, கொழும்பு), மயூரதி(பிரான்ஸ்- முன்னாள் ஆசிரியை மண்டைதீவு மகாவித்தியாலயம்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான யோகம்மா, பாலசிங்கம்(சிவநெறிச்செம்மல்), செல்வராணி மற்றும் கலாபூசணம் கனகரத்தினம்(ஓய்வுபெற்ற கணக்குகள் சரிபார்த்தல் தலைமை அதிகாரி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

புஸ்பாகரன்(முன்னாள் ஆசிரியர் இராகலை தமிழ் மகாவித்தியாலயம், லண்டன்), குபேரன்(ஆசிரியர்- நல்லாயன் மகளிர் கல்லூரி, நுவரெலியா), சிவானந்தன்(ஜனதா ஸ் ரீல், கொழும்பு), செந்தில்குமரன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற சி.நா.மதியாபரணம்(சமாதான நீதிவான்) மற்றும் லேவாதேவி, தில்லைநாயகி(ஓய்வுபெற்ற சங்கீத ஆசிரியை), காலஞ்சென்றவர்களான கிருஷ்ணசாமி(வர்த்தகர்), கனகம்மா மற்றும் சரஸ்வதி பெரியநாயகி(மருத்துவர்- நீர்கொழும்பு), ஆறுமுகம்(ஓய்வுபெற்ற உதவி சாலை முகாமையாளர் இலங்கை போக்குவரத்து சபை கோண்டாவில்), குணபூசணி,  கதிரேசபிள்ளை(ஓய்வுபெற்ற உதவி கல்விப்பணிப்பாளர், வேலணை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்றவர்களான இரத்தினசபாபதி(வர்த்தகர்),  சொர்ணலிங்கம்(வர்த்தகர்), நடராசா(ஓய்வுபெற்ற தொழில் நுட்ப உத்தியோகத்தர்) மற்றும் திலகவதி, வரதலட்சுமி(ஓய்வுபெற்ற அதிபர் யாழ் இளையதம்பி இந்து வித்தியாலயம்) ஆகியோரின் அன்புச் சகலனும்,

மதியாபரணம்- யோகம்மா, குழந்தைவடிவேல்- வள்ளிப்பிள்ளை, திருநாவுக்கரசு- சரஸ்வதி, பரமலிங்கம்- தவமணி ஆகியோரின் அன்புச் சம்பந்தியும்,

சிந்துஜன்(இரசாயன பொறியலாளர், ITM POWER- UK), அபிராமி(கணக்காளர்,TAX & LINK COMPANY- லண்டன்), இலக்சியா, அனுசிகன், அக்சிகன்(இலங்கை), அக்சரன், அக்சிதா, அபிசரன்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 30-12-2020 புதன்கிழமை அன்று கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் மு.ப 09:00 முதல் பி.ப 01:00 மணிவரை அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் பி.ப 01:30 மணிக்கு இறிதிக்கிரியை நடைப்பெற்று அதனைத் தொடர்ந்து பி.ப 04:00 மணியளவில்கல்கிசை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.   

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்