Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 08 DEC 1948
இறப்பு 22 APR 2023
அமரர் சுப்ரமணியம் மகாதேவா 1948 - 2023 நெடுந்தீவு, Sri Lanka Sri Lanka
Tribute 8 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், முல்லைத்தீவு சிவபுரம், பாண்டியன்குளம், அனலைதீவு, ஜேர்மனி Neuss, நோர்வே Oslo, இந்தியா சென்னை ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த சுப்ரமணியம் மகாதேவா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி: 09-05-2024

தாய் தந்தைக்கு அன்பான பிள்ளையாய்
தாரத்திற்கு தக்க துணைவனாய்
தன்நலம் கருதா பண்பாளனாய் வாழ்ந்திருந்தாய்!

ஆலமரம் போல அனைவருக்கும் நிழல் தந்தாய்
நாலும் தெரிந்தவனாய் நல்மனிதனாய் வாழ்ந்திருந்தாய்
காலமெல்லாம் எமைக்காத்து களித்திருப்பாய் என்றிருக்க
கண்ணிமைக்கும் நேரமதில் காற்றோடு காற்றானாய்!

எம்முயிரை உன்னில் தொலைத்துவிட்டு
உன் இதயம் சுமந்து நடக்கின்றோம் கண்ணீரோடு
ஓராண்டென்ன ஓராயிரம் ஆண்டானாலும்
எம் மனதை விட்டு அழியாது உன் நினைவும் நின்முகமும்!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம் அப்பா...

உங்கள் பிரிவால் வாடும்
மனைவி, பிள்ளைகள், மருமக்கள்,
பேரப்பிள்ளைகள், உற்றார் மற்றும் உறவினர்.

தகவல்: கண்ணன் சண்முகவேல் (மருமகன்)

கண்ணீர் அஞ்சலிகள்

Photos

Notices

மரண அறிவித்தல் Sun, 23 Apr, 2023