யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், டென்மார்க் Svendborg ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சுப்ரமணியம் விபினரூபன் அவர்கள் 11-11-2022 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், வல்லிபுரம் சுப்ரமணியம்(டென்மார்க்) யோகராணி(டென்மார்க்) தம்பதிகளின் அன்பு மூத்த மகனும், காலஞ்சென்ற தெய்வேந்திரம் குணம், மனோன்மணி(இலங்கை) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கௌரி(டென்மார்க்) அவர்களின் அன்புக் கணவரும்,
ஸ்வேதா, கனிகா, ஜெனோசன் ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அன்பின் திருவுருவே
அலையும் அடித்து ஓய்ந்தது
காற்றும் வீச மறந்தது
கடவுளும் கல்லாய் போனானே
காத்திருந்து காலனவன் சதி செய்தானே?
நீ பாசமாய் பார்க்கும் பார்வை எங்கே?
நேசமாய் பகிர்ந்த பேச்சு எங்கே?
கண்களில் காட்டிடும் கருணை எங்கே?
மண்ணில் எமக்கிருந்த சுகம் எங்கே?
என்றெமைக் கலங்க விட்டதேனோ...!
நிறைவேறா உன் ஆசைகளோடு
விரைவாக ஏன் பிரிந்தாய் இவ்வுலகை விட்டு....?
உன் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்....
நிகழ்வுகள்
- Wednesday, 16 Nov 2022 10:00 AM - 12:30 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
RIP dear Anna.