யாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியா கூமாங்குளத்தை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட இராசலெச்சுமி சிறிஸ்கந்தராசா அவர்களின் நன்றி நவிலல்.
ஆயிரம் சொந்தங்கள்
அருகில் இருந்தாலும்
அன்னையே உம்மைப் போல
யாரும் இங்கில்லையே!
உங்களுடன் வாழ்ந்த வாழ்வினை
தினமும் எண்ணி தவிக்கின்றோம் - அம்மா
மீண்டும் ஒர் பிறப்பிருந்தால்
நீங்களே எம் தாயாக வரவேண்டும்
என்றென்றும் உங்கள் நினைவுகளுடன்
வாழ்கின்றோம் அம்மா!
ஓம் சாந்தி! சாந்தி! சாந்தி!
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், தொலைநகல், மின்னஞ்சல், சமூக வலைதளங்கள் ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் அந்தியேட்டிக் கிரியை எதிர்வரும் 03-04-2021 சனிக்கிழமை அன்று கீரிமலை புனித தீர்த்தக்கரையிலும், வீட்டுக்கிருத்திய நிகழ்வுகள் 05-04-2021 திங்கட்க்கிழமை அன்று அன்னாரின் இல்லத்திலும் நடைபெறவுள்ளதால் அத்தருணம் தாங்களும் தங்கள் குடும்ப சகிதம் வருகை தந்து அன்னாரின் ஆத்மசாந்திப் பிரார்த்தனையிலும், அதனைத்தொடர்ந்து நடைபெறும் மதிய போசன நிகழ்விலும் கலந்து கொள்ளுமாறு தங்களை அன்புடன் அழைக்கின்றோம்.
Today, you are not here with us but we will always remember you as a winner, who lived like a King all his life…. May your soul Rest in Peace