14ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் ஸ்ரீமதி கமலாதேவி தியாகராஜ ஐயர்
(குப்பம்மாள்)
வயது 88
Tribute
2
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
தென் இந்தியா புதுக்கோட்டை ஜமீன் பனையப்பட்டியைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரி சங்கத்தானை ஸ்ரீநிலையத்தை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ஸ்ரீமதி கமலாதேவி தியாகராஜ ஐயர் அவர்களின் 14ம் ஆண்டு நினைவஞ்சலி.
அப்பம்மா பதினான்கு ஆண்டுகள்
கரைந்ததம்மா உங்கள்
அன்பு முகம் எம் இதயங்களை விட்டு
இன்னும் கரையவில்லையம்மா!
நீங்கள் எங்களை விட்டு
அகலவில்லையம்மா! எங்களோடுதான்
வாழ்கிறீர்கள் அப்பம்மா!
பூவை விட்டு மணம் பிரியாது
நீரை விட்டு அலை பிரியாது
எம் இதயங்களை விட்டு என்றும்
பிரியாத தாய் நீங்களம்மா!
அன்று எங்கள் அழுகையின்
அர்த்தம் புரிந்த அகராதி
புத்தகம் நீங்களம்மா!
இன்றோ அழுது புரண்டு தவிக்கின்றோம்
கேட்கவில்லையாம்மா! ஆயிரம்
சொந்தங்கள் அணைத்திட
இருந்தாலும் உங்களை போன்று
அன்பு செய்ய யாரும் இல்லையம்மா
இவ் உலகில்...
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனை பிரார்த்திக்கும் குடும்பத்தினர்.
தகவல்:
பேரப்பிள்ளைகள்