யாழ். அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், புத்தளம், ஐக்கிய அமெரிக்கா Hicksville ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சோமசுந்தரம் கிருபாகரன் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும்
மாண்டார் மீள்வதில்லை யாமறிவோம் பல
நீண்டாண்டுகள் எம்முடன் சேர்ந்தே வாழ்ந்து
மாண்டாரோடு இணைந்த என் துணைவரே சாந்தி பெறுக..
அச்சுவேலி தந்த அருமைச் செல்வம் நீர்
சோமசுந்தரம் - சரஸ்வதி தம்பதி கண்ட முத்து நீர்
சோம்பலின்றி உழைத்து வாழ்ந்த எம் சொத்து நீர்
சோகமாய்ப் போனதென்ன உம் வாழ்வில் நோய் கண்டு
ஐந்து கரத்தானை யானை முகத்தானை நேசித்தீர் அவர்
ஐந்து உடன்பிறப்புகளைத் தந்தே உமை போசித்தார்
பிள்ளைகள் இருவர் மருமக்கள் இருவர் பேரன் மற்றும் நான்
ஆறுபேராய் நின்று ஆறாத்துயரில் துடிக்கின்றோம்
பிரசாத்தை தனுசியாவை பிள்ளைகளாய் நம் வாழ்வில்
பெற்றெடுத்த காலமதைப் பின்னோக்கிப் பார்க்கின்றேன்
கல்விச்செல்வம் கருத்தாய் ஊட்டி அவர் வாழ்வுயர்த்தினிரே
கனகாலம் இதைப் பார்த்து மகிழ அதிஷ்டமிழந்தே போனதென்ன?
சிந்தனையில் நேர்மை கொண்டே நீதியதை மனதில் கண்டீர்
வந்ததுயர் வேறு யார்க்கும் வரவே வேண்டாம் என ஏக்கம் கொண்டீர்
உதவும் குணம் கொண்டே உலவ முடியாது முடங்கியோர்க்காய்
வறுமையில் வாழும் ஏழையர்க்காய் உதவி நின்றீர்
காங்கேயன் துறைகண்ட சீமெந்துத் தொழிலை நீரும்
தம்மன்னா வரை வந்து சீராகத்தானே செய்தீர்
தாங்க இயலாத்துயரில் எமை மூழ்கடித்தே வைத்து நீரும்
இம்மண்ணை விட்டு விண்ணகம் தான் சென்றீர் சாந்தி பெறவே...
உங்கள் அன்பு மனைவி பவளராணி கிருபாகரன்
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
ஆழ்ந்த அனுதாபங்கள். அன்னாரின் ஆத்மா சாந்தியடைவதாக!