Clicky

அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்
அன்னை மடியில் 22 JUL 1958
ஆண்டவன் அடியில் 25 SEP 2021
அமரர் சோமசுந்தரம் கலாதேவி 1958 - 2021 புங்குடுதீவு 4ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

யாழ். புங்குடுதீவு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ வதிவிடமாகவும் கொண்ட சோமசுந்தரம் கலாதேவி அவர்களின் அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

ஆயிரம் சொந்தங்கள்
அருகில் இருந்தாலும்
அன்னையே உம்மைப் போல
யாரும் இங்கில்லையே!
உங்களுடன் வாழ்ந்த வாழ்வினை
தினமும் எண்ணி தவிக்கின்றோம் - அம்மா
மீண்டும் ஒர் பிறப்பிருந்தால்
நீங்களே எம் தாயாக வரவேண்டும்
என்றென்றும் உங்கள் நினைவுகளுடன்
வாழ்கின்றோம் அம்மா!
 ஓம் சாந்தி! சாந்தி! சாந்தி!

 அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

அந்தியேட்டிக் கிரியைகள் எதிர்வரும் 23-10-2021 சனிக்கிழமை அன்று நடைபெற்று 24-10-2021 ஞாயிற்றுகிழமை அன்று 50, Place de Torcy Marx dormay 75018 Paris என்ற இடத்தில் இடம்பெறும் ஆத்ம சாந்திப் பிரார்த்தனையும் மதிய போசனத்திலும் கலந்து கொள்ளுமாறு உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 4 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.