யாழ். ஊர்காவற்துறை முகாம் வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சொலமன் இருதயராயஜா மகேந்திரன் அவர்களின் நன்றி நவிலல்.
அன்னாரின் மறைவுச்செய்தி கேட்டு எங்கள் இல்லங்களுக்கு வருகை தந்து எமக்குஆறுதல் கூறியவர்களுக்கும், இவரது இறுதி நிகழ்வில் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தியவர்களுக்கும், மற்றும் தொலைபேசி மூலமாகவும், சமூக வலைத்தளங்கள்ஊடாகவும் துயரத்தில் பங்கு கொண்ட உறவினர்கள், நண்பர்களுக்கும், அன்னாரின் ஆத்மா அமைதியில் இளைப்பாறவும், இவரது இழப்பால் துயருறுவோரின் ஆறுதலுக்காகவும், திருப்பலி ஒப்புக்கொடுத்து செபித்த அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகளுக்கும், மேலும் பல்வேறு வழிகளில் உதவி நின்ற அன்பான உறவினர்கள், நண்பர்கள், அனைவருக்கும் எமது குடும்பத்தின் சார்பில் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.