

யாழ். ஊர்காவற்துறை முகாம் வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சொலமன் இருதயராயஜா மகேந்திரன் அவர்கள் 30-10-2020 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
நாம் இவ்வுலகில் குடியிருக்கும் உடலாகிய கூடாரம் அழிந்து போனாலும்
கடவுளிடமிருந்து கிடைக்கும் வீடு ஒன்று விண்ணுலகில் நமக்கு உண்டு
(2 கொரிந்தியர் 5:1)
அன்னார், காலஞ்சென்ற சொலமன், மரியம்மா தம்பதிகளின் அன்பு மகனும், நாகலிங்கம் அந்தோனியாப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மேரி ஜோசப்பின் அவர்களின் அன்புக் கணவரும்,
ஜகவீன், குவல்ரீனா, றெபேக்கா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான சந்தியாப்பிள்ளை, சிசிலியம்மா, சேவியர் மற்றும் லூர்துமலர், சிறப்பினம்மா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஜெரின், பிரிமன், டெனி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
மேரி யசிந்தா, மேரி மகிறேற், மேரி லூசியா, மேரி கலிஸ்ரா, தேவதாஸ், பிறேமதாஸ் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஜெரோசின், ஜொய்சின், ஜொகென்சி, ஜொகன்சன், ஜொயல்சன், எலினா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 30-10-2020 வெள்ளிக்கிழமை அன்று அவரது இல்லத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டு பின்னர் பி.ப 04:30 மணியளவில் ஊர்காவற்துறை கிறீஸ்தவ சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.