யாழ். சங்கானை ஆஸ்பத்திரி வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சிவயோகேஸ்வரி தவபாஸ்கரன் அவர்களின் 45ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
எம்மை ஆறாத்துயரில் ஆழ்த்தி மீளாத்துயில் கொண்ட சிவயோகேஸ்வரி தவபாஸ்கரன் அவர்களின் மரணச் செய்தியறிந்து, எமக்கு ஒத்தாசைகள் புரிந்தவர்களுக்கும், தொலைபேசி மூலமாகவும், சமூகவலைத்தளம் ஊடாகவும், நேரடியாகவும் அனுதாபங்கள் தெரிவித்த உள்நாட்டு, வெளிநாட்டு உறவினர்கள், நண்பர்களுக்கும், இறுதி நிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்கும், அந்நிகழ்வை பொறுப்பேற்று வேண்டிய அனைத்து உதவிகளைச் செய்த அன்புள்ளங்களுக்கும் மற்றும் ஆத்மா சாந்தி கிரியைகளை சிறப்பாக நடத்தி தந்த அந்தணர்களுக்கும், அதற்கு வேண்டிய உதவிகளை செய்தோர்க்கும், மதிய போசனத்தில் கலந்து கொண்டவர்களுக்கும், சகல நிகழ்வுகளிலும் எமக்கு இன்றுவரை வேண்டிய அனைத்து உதவிகளையும் செய்த திருமதி நாகரட்ணம் துரைராஜா குடும்பத்தினருக்கும் எமது இதய பூர்வமான நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.