Clicky

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
பிறப்பு 17 MAY 1934
இறப்பு 03 JAN 2024
திரு சிவசுப்ரமணியம் மகாதேவன்
Retired Senior Irrigation Engineer – Department of Irrigation, Colombo 7
வயது 89
திரு சிவசுப்ரமணியம் மகாதேவன் 1934 - 2024 ஆலங்குளாய், Sri Lanka Sri Lanka
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ். ஆலங்குளாய் சண்டிலிப்பாயைப் பிறப்பிடமாகவும், "ராஜபதி", மஞ்சத்தடி இணுவில், கொழும்பு, Harrow (பிரித்தானியா) ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சிவசுப்ரமணியம் மகாதேவன் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம். 

அன்னாரின் 31ம் நாள் நினைவஞ்சலி , ஆத்மா சாந்தை பிரார்த்தனை 03-02-2024 சனிக்கிழமை அன்று மு.ப 10:30 மணிமுதல் பி.ப 03:00 மணிவரை Nower Hill High School George V Ave, Pinner HA5 5RP எனும் முகவரியில் நடைபெறும் அத்தருணம் அனைவரும் கலந்துக் கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 5 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

கண்ணீர் அஞ்சலிகள்