Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 05 MAR 1954
மறைவு 15 FEB 2025
திரு சிவசேகரம் கனகசபை
ஓய்வுநிலை கூட்டுறவு பரிசோதகர் & விரிவுரையாளர்- வவுனியா, செயலாளர்- சேமமடு ஆதிவிநாயகர் பரிபாலன சபை, பழைய மாணவர் & பொருளாளர்- சேமமடு சண்முகானந்தா வித்தியாலயம், உறுப்பினர்- வவுனியா மத்தியசபை, முன்னாள் உப தலைவர்- வவுனியா பலநோக்கு கூட்டுறவுச் சங்கம்
வயது 70
திரு சிவசேகரம் கனகசபை 1954 - 2025 சேமமடு, Sri Lanka Sri Lanka
Tribute 3 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

வவுனியா சேமமடுவைப் பிறப்பிடமாகவும், ஓமந்தையை வசிப்பிடமாகவும் கொண்ட சிவசேகரம் கனகசபை அவர்கள் 15-02-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கனகசபை நாகமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சின்னையா ஞானாம்பிகை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

விக்னேஸ்வரி(ஓய்வுநிலை ஆசிரியை) அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற தினேஷன், நிருஷன்(வைத்திய கலாநிதி- மாஞ்சோலை, முல்லைத்தீவு), அனோஜன்(இத்தாலி), வினோதன்(ஒப்பந்ததாரர்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

துர்கா(ஆசிரியை- வவுனியா பிரமண்டு வித்தியாலயம்), அகல்யா(இலங்கை வங்கி முகாமையாளர்- புதுக்குளம்), விவேகா(இத்தாலி) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

நவமலர், காலஞ்சென்ற மகேஸ்வரி, அன்னப்பிள்ளை, காலஞ்சென்ற கமலதேவன், கைலாயப்பிள்ளை(அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற சிவலிங்கம், ஈஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான வன்னியசிங்கம், அருளாநந்தம், சுப்பிரமணியம் மற்றும் சாந்தி, சுப்புலட்சுமி, விமலநாயகி, காலஞ்சென்ற குணரத்தினம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

தர்வின், ஐஸ்னவி, அனாமிகா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 18-02-2025 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 10:00 மணியளவில் ஓமந்தை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்)

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

வினோதன் - மகன்
நிருஷன் - மகன்
அனோஜன் - மகன்

Summary

Photos

Notices