யாழ். வேலணை கிழக்கு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Pierrefitte sur seine ஐ வசிப்பிடமாகவும், பிரான்ஸ் Val d Europe ஐ தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட சிவராஜா ராஜேஸ்வரி அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், தொலைநகல், மின்னஞ்சல், சமூக வலைதளங்கள் ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் 31ம் நாள் நினைவஞ்சலி 04-12-2020 வெள்ளிக்கிழமை அன்று நடைபெறும்.
மாமி என்று நீங்கள் அழைத்த குரல் என் காதுகளில் என்றும் ஒலித்துக் கொண்டிருக்கிறது உங்கள் ஆத்மா என்றும் தெய்வமாக இருந்து உங்கள் கணவர் பிள்ளைகளை வழிநடத்தும் என நம்புகிறேன் மாமி