
யாழ். வேலணை கிழக்கு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Pierrefitte sur seine ஐ வசிப்பிடமாகவும், பிரான்ஸ் Val d Europe ஐ தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட சிவராஜா ராஜேஸ்வரி அவர்கள் 04-11-2020 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கனகசபாபதி செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நடராஜா பூபதியம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சிவராஜா அவர்களின் அன்புத் துணைவியும்,
சிவரூபன், ஜெயரூபன், நிவிதா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சிவனேஸ்வரி அவர்களின் அன்புச் சகோதரியும்,
அபிராமி சிவரூபன் அவர்களின் அன்பு மாமியாரும்,
சண்முகலிங்கம், காலஞ்சென்றவர்களான ஆனந்தராஜா(நியூ லலிதா ஜூவல்லர்ஸ்- யாழ்பாணம்), யோகராஜா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
கஜிதா, சுவிதா, சுவிதன் ஆகியோரின் பெரியம்மாவும்,
அருண், ராயூ, கவிதா, ஈசன், கிரிசாத், கீதன், கிரிதாஸ் ஆகியோரின் சித்தியும்,
விமலாதேவி, சிவனேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகலியும்
கர்ஷன், பிரணிகா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
மாமி என்று நீங்கள் அழைத்த குரல் என் காதுகளில் என்றும் ஒலித்துக் கொண்டிருக்கிறது உங்கள் ஆத்மா என்றும் தெய்வமாக இருந்து உங்கள் கணவர் பிள்ளைகளை வழிநடத்தும் என நம்புகிறேன் மாமி