யாழ். வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், அளவெட்டி, கனடா Scarborough ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த சிவப்பிரகாசம் நாகேஸ்வரி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 22-02-2026
அன்புடனும் பாசத்துடனும்
பாதுகாத்த எங்கள் அன்பு அன்னையே
எங்கள் அனைவரையும் விட்டுப்
பிரிந்தது தான் ஏனோ
நாம் விரும்பும் ஒரு உயிர் - நம்மை
விட்டு விலகி நிற்கும் போது தான்
தெரிகின்றது
கண்ணீர் துளிகளின்
விலை என்னவென்று அம்மா!
எத்தனை உறவுகள் அருகிலிருந்து
அன்பினைப் பொழிந்தாலும்
அத்தனையும்
உந்தன் அன்புக்கு
ஈடாகுமா அம்மா!
ஆருயிர் அம்மாவே.......!
பார்க்கும் பொருளெல்லாம்
உங்கள் முகம்!
போகுமிடமெல்லாம் உங்கள் நினைவு!
கேட்கும் குரலெல்லாம் உங்கள் குரல்!
வருடங்கள் எத்தனை சென்றாலும்
மாறுமோ இன் நிலமை..?..!!
உங்கள் ஆத்மா சாந்தி அடைய எல்லாம்
வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
அம்மம்மாவின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்🙏 குடும்பத்தினர் அனைவருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.