10ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் சிவபாதசுந்தரம் சிவகார்த்திக்
வயது 27

அமரர் சிவபாதசுந்தரம் சிவகார்த்திக்
1985 -
2012
சங்குவேலி, Sri Lanka
Sri Lanka
Tribute
2
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். சங்குவேலி மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Liverpool ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சிவபாதசுந்தரம் சிவகார்த்திக் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்களை விட்டு நீ பிரிந்து
பத்தாண்டு சென்றது
மறைந்த உன் நினைவு மட்டும்
நெஞ்சில் மாறாமல் உள்ளது மகனே
ஆண்டவன் அழைத்திட்ட பின்னாலே
அழுகிறது இதயம் வெறுமையாகவே
கலைந்து செல்லும் மேகமென
காலங்கள் கடந்து போகின்றனவே
ஆனாலும் உன் நினைவுகள்
புயலென எரிமலையென
கடலலையென எம் மனங்களில்
பொங்கிப்பிரவாகித்துக் கொண்டே இருக்கும் மகனே
வாழ்ந்த கதை முடியுமுன்னே- நீ
வாழாமல் மாய்ந்ததேனடா?
நூறாண்டு போனாலும் உன்
நிலவு முகம் தேயாதடா
உன் நினைவுகள் தரும் கண்ணீர்
இவ்வுலகில் நாம் வாழும் வரை
வற்றிப் போகாது.உன் ஆத்மா
சாந்தியடைய பிரார்த்திக்கின்றோம் !!
தகவல்:
குடும்பத்தினர்
நீ இந்த மண்ணில் மீண்டும் பிறக்க வேண்டும், நீ எமை விட்டு பிரிந்து யுகமேயானாலும் உன் பசுமையான நினைவுகள் ஏராளம்.... எம் மனதை விட்டு அகலாது நீ வளமோடு வாழ்வாய் என வாஞ்சையுடன் நாங்கள் கண்ட கனவு ஏராளம்...