யாழ். அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், கோப்பாயை வதிவிடமாகவும் கொண்ட சிவபாதம் தனலட்சுமி அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
அம்மா உங்கள் பாசம் மிகுந்த முகத்தைப் பார்க்காமலும்
கனிவு நிறைந்த குரலைக் கேட்காமலும்
கடந்த 31 நாட்களாக எல்லோரும் ஏங்கித் தவிக்கின்றோம்
எங்களுடன் நீங்கள் வாழ்ந்த நாட்கள்
மீண்டும் வராதா என்று தினமும்
கண்கலங்கித் தேடுகின்றோம்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், தொலைநகல், மின்னஞ்சல், சமூக வலைதளங்கள் ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் அந்தியேட்டி கிரியைகள் எதிர்வரும் 10-08-2020 திங்கட்கிழமை அன்று காலை 07:00 மணியளவில் “கீரிமலை புனித தீர்த்தக்கரையுலும்” நடைப்பெறும்.
Our deepest condolence to you and your family. May her soul rest in peace