1ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
8
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், கோப்பாயை வதிவிடமாகவும் கொண்டிருந்த சிவபாதம் தனலட்சுமி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அம்மா!
ஆண்டொன்று ஆனதம்மா இன்று!
ஈன்றெம்மைப் பெற்றவளே!
உனை இழந்து! உமைப் பிரிந்தோம்!
பல நாள் ஊணுறக்கம் மறந்தோம்!
அழுதழுது தேடுதம்மா
எம் விழிகள் உங்களைக் காண்பதற்கு
ஒருமுறை வருவீர்களோ!
உங்கள் திருமுகம் காண்பதற்கு
அழுத விழிகளுக்கு ஆறுதல் தருவீர்களோ!
எமைப் பிரிந்தவளே! ஏன் எமைப் பிரிந்தாய்!
ஐயமில்லை! ஒன்று இரண்டு ஏன்
ஓராயிரம் ஆண்டுகள் கடந்தாலும்
உமை மறவோம் உங்கள்
நினைவுகளைச் சுமந்து வாழ்வோம்!
உங்கள் ஆத்மா சாந்திபெற
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..
தகவல்:
குடும்பத்தினர்
Our deepest condolence to you and your family. May her soul rest in peace