
யாழ். பொன்னாலையைப் பிறப்பிடமாகவும், கொழும்பை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட சிவகுருநாதன் இரங்கராஜா அவர்கள் 15-06-2020 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சிவகுருநாதன், ரோகினியம்மா தம்பதிகளின் அருமைப் புதல்வரும், காலஞ்சென்ற கதிர்காமர் பொன்னம்பலம், மனோன்மணி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
செம்மனச்செல்வி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
K.P.S வரதராஜா(ஓய்வுபெற்ற மேல் நீதிமன்ற நீதிபதி), பாக்கியலட்சுமி, செளந்தர்ராஜன்(Bahrain), விஜயலட்சுமி, ஜெயலட்சுமி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
தர்மாம்பிகை, காலஞ்சென்ற புலேந்திரன், மதிவதனி, காலஞ்சென்ற தர்மகுலசிங்கம், காலஞ்சென்ற ஞானசம்பந்தர், நாவுக்கரசன், கலைமகள், ஆரூரன், சுந்தரமூர்த்தி, வாதவூரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 16-06-2020 செவ்வாய்க்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பெராளை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்பட்டது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.