Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 08 DEC 1948
இறப்பு 26 MAR 2023
அமரர் சிவஞானவதி காந்தி 1948 - 2023 ஏழாலை கிழக்கு, யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

திதி : 13-04-2024

யாழ். ஏழாலை கிழக்கைப் பிறப்பிடமாகவும், டென்மார்க் Asnæs ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த சிவஞானவதி காந்தி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

அன்பிலே மலர்ந்த முகம்
அழகுறச் சிரித்த இதழ்கள்
எம் குடும்பத்தின் குலவிளக்கு!

பாசமென்றால் எதுவென்று நாமறிய
பண்பில் உயர்ந்து நின்றாய்
நேசமிது தானென்று – எங்கள்
நெஞ்சமதை நெகிழ வைத்தாய்!

அம்மா நாம் மறக்கவில்லை
உம்மை என்றும் நினைப்பதற்கு
ஆறவில்லை நெஞ்சம்
அன்பின் ஈரம் காய்வதற்கு!

உன் நினைவால் நித்தம் வாடுகின்றோம்.....
சென்ற இடம் கூராயோ காலத்தின் கோலம்
எங்களிடம் இருந்து பிரிந்து விட்டாலும்
எந்நாளும் எம் மனதில் காவியமாய்
ஆகிவிட்டீர்கள் அம்மா...!

உங்கள் ஆத்மா சாந்தி அடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.

அன்னாரின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி 13-04-2024 புதன்கிழமை அன்று சிவஞானவதி மஹால் எனும் முகவரியில் நடைபெறும் மற்றும் டென்மார்க் இல் சந்திரராஜ்(மூத்த மகன்) சார்பாக நினைவஞ்சலி நடைபெறும்.

தகவல்: குடும்பத்தினர்

Photos