6ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் சிதம்பரநாதன் வேலுப்பிள்ளை
1957 -
2020
சுழிபுரம், Sri Lanka
Sri Lanka
Tribute
2
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
திதி: 20/01/2026
யாழ். சுழிபுரத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியாவை வதிவிடமாகவும் கொண்ட சிதம்பரநாதன் வேலுப்பிள்ளை அவர்களின் 6ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டுகள் ஆறு ஆகிவிட்டது
ஆறவில்லை எம் துயரம்!
நினைவுகள் எங்கள் மனதில்
என்றொன்றும் நிறைந்திருக்கும்
கண்ணை விட்டு மறைந்தாலும்- எம்
நெஞ்சை விட்டு மறைவதில்லை
கண்முன்னே வருவாயா
கதறுகின்றோம் ஐயா
காலங்கள் விடை பெறலாம்
ஆனாலும் கண் முன்னே
நிழலாடும் உங்கள் நினைவுகள்
ஒருபோதும் எங்களை விட்டு அகலாது
நீங்கள் வாழ்ந்த இவ்வுலகில்
எமை வாழவைக்க ஓயாதுழைத்து
இப்போ ஓய்வெடுத்துக் கொண்டீர்களே
நீங்கள் விட்டுப் போன வெற்றிடத்தில்
எதை இட்டு நிரப்புவோம் ஐயா
கல்லைறைப் பூக்களோடு எங்கள்
கண்ணீரும் பூத்துக்கிடக்கிறது ஐயா
எங்கள் இதயத்தில் வாழும் உங்கள்
நினைவுகள் எப்போதும் கலைந்து போகாது
தகவல்:
மனைவி, பிள்ளைகள், மருமக்கள்