
திதி:20/06/2025
யாழ். மாதகலைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு மாங்குளம், நெதர்லாந்து, ஜேர்மனி Nuremberg ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த சிற்றம்பலம் செல்வராஜா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஓராண்டு கண்ணீர் அஞ்சலி
ஆண்டு ஒன்று கடந்தாலும்
ஆறிடுமோ உங்கள் நினைவலைகள் -
கண்ணின் மணி போல்
எம்மை காத்த அன்புத் தெய்வமே -
ஆறிடுமோ எங்கள் துயரம்
பிரிந்து ஒரு வருடம் ஓடிப் போனது
இன்னும் நம்ப முடியாமல் நாங்கள்
இங்கு தவிக்கின்றோம்..!
ஆண்டொன்று ஆனதப்பா
உங்களை இழந்து
ஆறாத யுகங்களாய் ஒவ்வொரு
கணமும் கனத்த நாட்களாய் உங்கள்
நினைவுகளோடு கழிகிறதே அப்பா..!
நீங்கள் இல்லா இல்வாழ்க்கை
நிறைவற்றதாகவே இருக்கிறது
உங்களைப் போல் யார் வருவார்..!
எம்மை எல்லாம் அன்பால் அரவணைத்து
பண்பால் வழிநடத்திய அந்த நாட்கள்
எம்மை விட்டு நீண்ட தூரம்
சென்றாலும் மறையாது அப்பா..!
எத்தனை உறவுகள் என்
அருகில் இறுந்தாலும்
நான் தேடும் ஒரே உறவு
நீங்கள் மட்டுமே
ஏனென்றால் நீங்கள் என்
உறவு அல்ல என் உயிர் அப்பா!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனை வேண்டிநிற்கின்றோம்..!