யாழ். கச்சாய் வடக்கு, கொடிகாமத்தைப் பிறப்பிடமாகவும், வெள்ளாம்போக்கட்டி, கிளிநொச்சி புளியம்பொக்கணை நாகதம்பிரான் கோவிலடியை நிரந்தர வதிவிடமாகவும், வவுனியா(பூந்தோட்டம்), கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சிதம்பரப்பிள்ளை பரமசாமி அவர்கள் 11-05-2026 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சிதம்பரப்பிள்ளை செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், கணபதிப்பிள்ளை கனகாம்பிகை தம்பதிகளின் அருமை மருமகனும்,
அற்புதமலர்(வசந்தி) அவர்களின் அன்புக் கணவரும்,
கிருபாலினி(லண்டன்), கிருஷன்(Site Engineer NEXUS), கிருசாந்தன்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
இராமகிருஷ்ணன்(லண்டன்), துவிதா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம், குலசேகரம், வேலாயுதபிள்ளை, தில்லைநாயகி, மகேஸ்வரி மற்றும் சரஸ்வதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஜனுஸ், டிவான்ஸ், கனிஸ், கஜிஸ் ஆகியோரின் பாசமிகு அம்மப்பாவும்,
சாந்தநாயகி, தங்கமலர், கோபாலசிங்கம், தர்மகுலசிங்கம், பரராஜசிங்கம், ரோவனாதேவி, கோணேஸ்வரி, நாகேஸ்வரன் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 14-05-2026 வியாழக்கிழமை அன்று மாலை 03:00 மணியளவில் இல 10, இனிசியம் வீதி, தெஹிவளையில் அமைந்துள்ள இல்லத்தில் நடைபெற்று பின்னர் கல்கிசை நிசல செவன (Nisala Sevana) மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு
- Mobile : +94778585547
- Mobile : +447494650336
- Mobile : +447861669610